'ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்' என தகவல், சீல் வைக்கப்பட்ட குளம் - இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரிக்க உள்ளனர்.
திங்களன்று அந்த மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிஷங்கர் ஜெய்ன் எனும் வழக்கறிஞர் உள்ளூர் நீதிமன்றத்தை அணுகியதும், வளாகத்திற்குள் உள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதியை சீல் வைக்குமாறும்,அப்பகுதிக்குள் ஆட்கள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்றும் பனாரஸ் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குளத்துக்குள் இருப்பது சிவலிங்கம் அல்ல என்றும் செயற்கை நீரூற்று (ஃபவுண்டைன்) என்றும் ஞானவாபி மசூதி நிர்வாகம் கூறியுள்ளது.
சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறப்படும் அப்பகுதியை சீல் வைத்து பாதுகாப்பது மாவட்ட ஆட்சியர், பனாரஸ் மாநகர காவல் ஆணையர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் கமாண்டன்ட் ஆகியோரின் தனிப்பட்ட பொறுப்பு என்று நீதிபதி ரவி குமார் திவாகர் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு பின் 30க்கு 30 அடி அளவுள்ள இந்தப் பகுதி சீல் வைக்கப்பட்டு, கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதாக பனாரஸ் மாவட்ட ஆட்சியர் பிபிசி இந்தியிடம் தெரிவித்துள்ளார்.
- தாஜ் மஹாலின் பூட்டிய அறைகளில் உள்ள ரகசியங்கள் என்ன?
- ரமலான் நோன்பு இருக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
- பண்டிட்கள் காஷ்மீர் மண்ணை விட்டு வெளியேறிய இரவில் நடந்தது என்ன?
மசூதியின் முக்கிய நுழைவாயில் அடைக்கப்படவில்லை என்றும், செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த குளம் உள்ள பகுதி மசூதி வளாகத்தில் 10 சதவிகிதம் மட்டுமே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மசூதியில் கோயில் இருந்ததா? - வழக்கின் பின்னணி
16ஆம் நூற்றாண்டில் காசி கோயிலை இடித்து முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் இங்கு மசூதி கட்டப்பட்டது என்று கூறி உச்ச நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் வாரணாசி நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
18 ஆகஸ்ட் 2021 அன்று, டெல்லியைச் சேர்ந்த ஐந்து பெண்கள் ராக்கி சிங் என்பவர் தலைமையில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோயிலில் மா சிருங்கர் கௌரி, விநாயகர், அனுமன், ஆதி விஷேஷ்வர், நந்தி மற்றும் பிற தெய்வங்களை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.
காசி விஸ்வநாதர் கோயில் நடைபாதையை ஒட்டிய தசாஷ்வமேத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பிளாட் எண் 9130இல் அன்னை சிருங்கர் தேவி, ஹனுமன் மற்றும் விநாயகர் மற்றும் அடையாளம் புலப்படாத இந்து தெய்வங்கள் இருப்பதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர்.
அஞ்சுமன் இண்டோடெஜாமியா மசூதி குழு, மசூதியில் உள்ள தெய்வ சிலைகளை உடைப்பது, இடிப்பது, சேதப்படுத்துவது போன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் கோயில் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் குழு சனிக்கிழமை முதல் நாள் ஆய்வுக்காக அங்கு சென்ற பிறகு இந்த விவகாரம் சர்ச்சையானது.
வாரணாசியில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு (ஏஎஸ்ஐ) கடந்த ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டது.
அதன்படி சனிக்கிழமை அந்த ஆய்வு தொடங்கியது. அதை எதிர்த்தே மசூதி தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.
மசூதி நிர்வாகத்தை கவனித்து வரும் அஞ்சுமன் இண்டோடெஜாமியா மசூதி குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மசூதியில் நடைபெறும் ஆய்வுப்பணிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதாக, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்திருந்தது.
ஞானவாபி மசூதியில் நடைபெற்று வந்த ஆய்வு நேற்று (திங்கள்கிழமை) முடிவடைந்தது. இந்த ஆய்வின்போது மசூதியில் சிவலிங்கம் கிடைக்கப் பெற்றதாக, இந்து தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அது சிவலிங்கம் அல்ல, செயற்கை நீரூற்று என, முஸ்லிம் தரப்பினர் நிராகரித்துவிட்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!















Click it and Unblock the Notifications