ஹர்திக் பட்டேல் மீதான தேசத்துரோக வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹர்தி படேல் மீதான தேசத் துரோக வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
போலீசாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தேசத் துரோக வழக்கில் ஹர்திக் படேல் உள்ளிட்ட 5 பேரை சூரத் போலீசார் கடந்த 21 ம் தேதி கைது செய்து சபர்மதி மத்திய சிறையில் அடைத்தனர்.
தன் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் ஹர்திக் பட்டேல் மனு செய்து உள்ளார். அந்த மனு நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கெய்தர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஹர்திக் பட்டேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ஹர்திக் பட்டேல் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சூரத் போலீஸார் முழுமையாக விசாரித்து முடித்த பின்னரே இதுபற்றி எந்த முடிவும் எடுக்க முடியும் என்று கூறி ஹர்திக் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.
இந்த வழக்கில் 45 நாட்களுக்குள் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சூரத் போலீஸாரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அனுமதி இல்லாமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications