ஹர்திக் பட்டேல் மீதான தேசத்துரோக வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹர்தி படேல் மீதான தேசத் துரோக வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
போலீசாருக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் தேசத் துரோக வழக்கில் ஹர்திக் படேல் உள்ளிட்ட 5 பேரை சூரத் போலீசார் கடந்த 21 ம் தேதி கைது செய்து சபர்மதி மத்திய சிறையில் அடைத்தனர்.
தன் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் ஹர்திக் பட்டேல் மனு செய்து உள்ளார். அந்த மனு நீதிபதிகள் ஜகதீஷ் சிங் கெய்தர், பானுமதி ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஹர்திக் பட்டேல் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ஹர்திக் பட்டேல் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சூரத் போலீஸார் முழுமையாக விசாரித்து முடித்த பின்னரே இதுபற்றி எந்த முடிவும் எடுக்க முடியும் என்று கூறி ஹர்திக் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டனர்.
இந்த வழக்கில் 45 நாட்களுக்குள் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சூரத் போலீஸாரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும், வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அனுமதி இல்லாமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்தனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications