ஐ.பி.எல். பிக்ஸிங் விசாரணை- பிசிசிஐ பரிந்துரை நிராகரிப்பு! முத்கல் கமிட்டி விசாரிக்கிறது!!
டெல்லி: ஐ.பி.எல். முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்த மூவர் குழுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டபடி நீதிபதி முத்கல் கமிட்டி தொடர்ந்து விசாரணைகளை நடத்தவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது ஐ.பி.எல். பிக்ஸிங் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பதில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமே ஒரு குழுவை பரிந்துரைத்து அது விசாரணை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இதைத் தொடர்ந்து ஷிவ்லால் யாதவ் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை உச்சநீதிமன்றத்தில் பரிந்துரை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிசாஸ்திரி, கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஆனால் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருக்குமே எதிர்ப்பு கிளம்பியது. கிரிக்கெட் வாரியத்தால் ஊதியம் பெறும் ரவிசாஸ்திரி விசாரணை குழுவில் இடம் பெறக்கூடாது என்று பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்யா வர்மா முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சரத்பவார், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித்மோடி ஆகியோரும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட 3 பேருக்கும் கிரிக்கெட் வாரியத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதால் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் பிக்ஸிங் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கிரிக்கெட் வாரியத்தால் பரிந்துரை செய்த குழுவை உச்சநீதிமன்றமும் நிராகரித்தது.
என்.சீனிவாசன், சீனியர் கிரிக்கெட் வீரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீது முத்கல் கமிட்டி விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டு அவர்களது கருத்தை கேட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதி முத்கல் கமிட்டியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தை ஏற்று விசாரணை நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது.
-
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications