Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேதாஜி ஆவணங்களை வெளியிடும் விவகாரம்... மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்து விட்டது.

இது தொடர்பாக ஸ்நேகாசிஸ் முகர்ஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். நேதாஜி பற்றிய 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க மாநில அரசு வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசும் அதைப் பின்பற்றி நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

supremecourt

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.கோயல் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவல முதன்மை செயலாளரை மனுதாரர் அணுகலாம் என்றும், அவர்கள் பதில் அளிக்கும் வரை மனுதாரர் காத்திருக்க வேண்டும். அல்லது டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மத்தியில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த அரசுகள் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. இந்த ஆவணங்கள் வெளியிடாதது, மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என்று மனுதாரர் முகர்ஜி குற்றம் சாட்டினார். இதற்கு நீதிபதிகள், எல்லா இடத்துக்கும் அடிப்படை உரிமைகளை கொண்டு வரக் கூடாது என்று கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+