சஹாரா நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட் வார்னிங்!!
Subscribe to Oneindia Tamil

சஹாரா குழுமம் விதிமுறைகளை மீறி பொதுமக்களிடம் பல்லாயிரம் கோடி ரூபாயை திரட்டியது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ரூ22 ஆயிரம் கோடியை சஹாரா குழுமம் செலுத்தியாக வேண்டும். இந்த பணத்திற்கான உத்தரவாதம் குறித்து வரும் ஜனவரி 23ந் தேதி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி செய்யாது போனால் நாங்கள் விசாரணைக்கு உத்தரவிட நேரிடும். சிபிஐ மற்றும் கம்பெனிகள் துறை பதிவாளரையும் நாங்கள் அழைக்க நேரிடும். மேலும் சஹாரா நிறுவனத்தலைவர் சுப்ரதா ராய் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று உத்தரவிட்டது என்று கடுமை காட்டியது உச்சநீதிமன்றம்.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை வரும் 28 ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது












Click it and Unblock the Notifications