மீனவர்களுக்காக.. பாம்பனில் பாஜக நடத்திய 'பப்ளிசிட்டி' போராட்டம்!
பாம்பன்: கடல் தாமரை என்ற பெயரில் பாஜக சார்பில் பாம்பனில் மீனவர்களைக் காக்க்க கோரி ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் இதில் கலந்து கொண்டார். அவருக்கு மாநில பாஜக மீனவர் அணி சார்பில் ஆளுயர மாலை போட்டனர். வெள்ளி வாளையும் வழங்கினர்.
ஏற்கனவே மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரிடம் சிக்கி தினசரி அடி வாங்கியும், கைதாகியும், இலங்கை சிறையில் அடைபட்டு, உதைபட்டு வாழ்வாதாரம் பறிபோய்க் கொண்டிருக்கும் அவல நிலையில் உள்ள நிலையில், சுஷ்மா சுவராஜுக்கு மாலை போட்டு, வெள்ளி வாள் கொடுத்து பாஜகவினர் செய்த இந்த போராட்டத்தை வெறும் பப்ளிசிட்டிக்காக நடந்த போராட்டம் என்று அங்குள்ள மக்கள் வேதனையுடன் விமர்சித்துள்ளனர்.

முன்னதாக நேற்று நடந்த இந்தப் போராட்டத்திற்கு பாஜக மீனவர் அணித் தலைவர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார்.
நாதபுரம் மாவட்டம் பாம்பனில் தமிழக மீனவர் உரிமை காக்கும் வகையில் தமிழக பாரதீய ஜனதா மீனவர் அணி சார்பில் கடல்தாமரை என்ற போராட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. போராட்டத்துக்கு மாநில மீனவர் பிரிவு தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
போராட்டத்தின்போது சுஷ்மா சுவராஜ் பேசுகையில்,
பாரதநாடு நீண்ட கடற்கரையை கொண்டது. இந்த பகுதியில் அதிகமான மீனவ சமுதாய மக்கள் வாழ்கின்றனர். கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் அந்நிய நாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானாலும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசாலும் பாதிக்கப்படுகின்றனர். சிறைபிடிப்பது மட்டுமல்லாமல் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
நான் இலங்கைக்கு சென்றபோது அந்த நாட்டு அதிபர் ராஜபக்சேயிடம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கூறினேன். ஆனால் தொடர்ந்து தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடமும் மீனவ பெண்கள் நிலையை எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. தற்போது கூட 38 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் ராஜ்யசபை உறுப்பினராக மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவரை நரேந்திர மோடி தேர்ந்தெடுத்து உள்ளார். பா.ஜ.க. மீனவர் பிரிவு பொதுச்செயலாளர் முரளிதரராவ் தலைமையில் கொள்கை ரீதியான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் மீனவர் பிரச்சினைக்காக தனி அமைச்சர், தனி இலாகா அமைப்போம். கடற்கரை அருகே ஒரு மீனவர் நகரத்தை உருவாக்கி கல்வி உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி மீனவர்கள் வாழ்க்கைத்தரம் உயர நடவடிக்கை எடுப்போம்.
இலங்கை பிரச்சனையை இந்திய பிரதமர்தான் தீர்க்க முடியும். தமிழகம் தீர்க்க முடியாது. இதற்கு பா.ஜ.க. ஆட்சி அமைத்ததும் முழு தீர்வு காணப்படும் என்றார்.
சுஷ்மாவின் பேச்சும் கூட நாடாளுமன்றத் தேர்தலையொட்டியே இருந்ததால் இந்த போராட்டம், மீனவர்களுக்கான போராட்டம் என்ற நிலையைத் தாண்டி மீனவர்களின் ஆதரவை தேர்தலுக்குத் திரட்டுவது என்று மாறிப் போய்க் காணப்பட்டது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்








Click it and Unblock the Notifications