டிக்டாக் வீடியோ வெளியிட்டு சஸ்பெண்ட் ஆன பெண் போலீஸ்.. குவியும் சினிமா வாய்ப்புகள்
அஹமதாபாத்: போலீஸ் ஸ்டேசனில் டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட குஜராத் பெண் போலீசுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடித்த ஆல்பத்தை இரண்டே நாளில் 20 லட்சம் பேர் யூடியூபில் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அவருக்கு தற்போது சினிமா வாய்புகள் குவிந்து வருகிறது.
Recommended Video
குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் போலீஸ் ஸ்டேசனில் அல்பிதா சவுத்ரி என்ற பெண் போலீஸாக பாணியாற்றி வந்தார். டிக்டாக்கில் மோகம் கொண்ட அல்பிதா அடிக்கடி டிக்டாக்கில் தான் மூழ்கி கிடந்து வருகிறார். இவருக்கு குஜராத்தில் ஏராளமான ரசிர்கர்கள் உள்ளனர்.
பெண் போலீஸ் அல்பிதா கடந்த 2019ம் ஆண்டு ஜுலை மாதம் வேலை பார்த்துக்கொண்டிருந்த காவல் நிலையத்தில் டிக்டாக் எடுத்து ஆடிபாடி அசத்தலான வீடியோ ஒன்றை பதிவிட்டார். இந்த வீடியோ குஜராத் முழுவதும் வைரலானது. இதைபார்த்த உயர் அதிகாரிகள் அல்பிதா சவுத்ரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பிட்ட பின் அவர் முழுநேரமும் டிக்டாக்கே கதி என இருந்தார். பல வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் அல்பிதா சவுத்ரிக்கு சினிமா ஆல்பம் பாடல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இதன்படி அவரது நடிப்பில் செப்டம்பரில் குஜராத்தி மொழியில் வெளியான ஆல்பம் பல லட்சம் பேரை சென்றடைந்தது.
இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து நான்கு ஆல்பங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆல்பங்கள் எல்லாமே குஜராத்தை தாண்டி வடமாநிலங்கள் முழுவதும் காவலர் அல்பிதா லங்நஜ் சவுத்ரி பேமஸ் ஆகி உள்ளார். இப்போது அவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதுபற்றி அல்பிதா சவுத்ரி கூறுகையில், என் தந்தையின் ஆசைக்காக காவல்துறையில் சேர்ந்து காவலர் ஆனேன். ஆனால் இன்று என் கனவு நிறைவேறியது . கதாநாயகியாக நடிக்க வேண்டும், மாடலிங் துறையில் நுழைய வேண்டும் என்பதற்காக பயணித்து கொண்டிருக்கிறேன் என்றார்.