தூய்மை இந்தியா: இனி ஹோட்டலில் கூடுதலாக 0.5 சதவீதம் சேவை வரி கொடுக்கணும்
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி சேர்ப்பதற்காக வரிவிதிக்கத்தக்க அனைத்து சேவைகளுக்கும் கூடுதலாக 0.5 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சேவை வரி உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைத்து சேவைகள் பிரிவிலும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக 0.5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான பாரதம்
சுத்தமான பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூய்மை இந்தியா திட்டத்தினை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சேவைவரி 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளர்.

சேவை வரி உயர்வு
தொலைபேசி கட்டணம், ஹேட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.
கடந்த மே 31ம் தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1ம் தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

0.5 சதவீதம் வரி உயர்வு
தற்போது, தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரி மேலும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தாராளமாக நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு நேற்று 0.5 சதவீதம் உயர்த்தியது. எனவே இனிமேல் சேவை வரி 14.5 சதவீதமாக இருக்கும்.

நவம்பர் 15முதல் அமல்
இந்த சேவை வரி உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த 0.5 சதவீத சேவை வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்படும். இந்த கூடுதல் 0.5 சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications