தூய்மை இந்தியா: இனி ஹோட்டலில் கூடுதலாக 0.5 சதவீதம் சேவை வரி கொடுக்கணும்
டெல்லி: தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி சேர்ப்பதற்காக வரிவிதிக்கத்தக்க அனைத்து சேவைகளுக்கும் கூடுதலாக 0.5 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சேவை வரி உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அனைத்து சேவைகள் பிரிவிலும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக 0.5 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்பட உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான பாரதம்
சுத்தமான பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூய்மை இந்தியா திட்டத்தினை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர். பிரபலங்கள் பலரும் சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சேவைவரி 0.5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளர்.

சேவை வரி உயர்வு
தொலைபேசி கட்டணம், ஹேட்டலில் சாப்பிடுவது மற்றும் தங்குவதற்கான கட்டணம், காப்பீடு தொகை போன்றவற்றுக்கு தற்போது 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படுகிறது.
கடந்த மே 31ம் தேதி வரை 12.36 சதவீதம்தான் சேவை வரி விதிக்கப்பட்டது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ஜூன் 1ம் தேதி முதல் சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

0.5 சதவீதம் வரி உயர்வு
தற்போது, தூய்மை இந்தியா திட்டத்துக்காக சேவை வரி மேலும் 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தாராளமாக நிதி உதவி வழங்குமாறு மத்திய அரசு ஏற்கனவே கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக, மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு சேவைகள் மீது விதிக்கப்படும் சேவை வரியை மத்திய அரசு நேற்று 0.5 சதவீதம் உயர்த்தியது. எனவே இனிமேல் சேவை வரி 14.5 சதவீதமாக இருக்கும்.

நவம்பர் 15முதல் அமல்
இந்த சேவை வரி உயர்வு வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த 0.5 சதவீத சேவை வரி உயர்வின் மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்துக்காக செலவிடப்படும். இந்த கூடுதல் 0.5 சதவீத சேவை வரியின் மூலம் இந்த நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications