அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் – ராஜஸ்தானில் மட்டும் 100 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 900 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்ற மாநிலங்களை விட இங்கு தான் பன்றிக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சலுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,542 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனை நடந்துள்ளது.
இதன் மூலம் 831 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதில் 42 பேர் பலியாகி உள்ளனர்.மேலும், கடந்த ஞாயிறு அன்று 99 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்தது.
கடந்த 6 நாள்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் புள்ளி விவரங்களை ஆராயும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போக்கு தெரியவருகிறது.எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபாலில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் அடிப்படை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications