அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் – ராஜஸ்தானில் மட்டும் 100 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 100 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 900 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்ற மாநிலங்களை விட இங்கு தான் பன்றிக்காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ஆம் தேதி வரை பன்றிக் காய்ச்சலுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர்.

அங்கு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து இதுவரை 2,542 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான பரிசோதனை நடந்துள்ளது.
இதன் மூலம் 831 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதில் 42 பேர் பலியாகி உள்ளனர்.மேலும், கடந்த ஞாயிறு அன்று 99 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 33 பேருக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்தது.
கடந்த 6 நாள்களில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் புள்ளி விவரங்களை ஆராயும்போது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் போக்கு தெரியவருகிறது.எனினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போபாலில் மட்டும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் அடிப்படை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications