என்னை இனி நீங்கள் பார்க்கப் போவதே இல்லை- தெலுங்கானா விவசாயியின் கடைசி அழைப்பு!
மேடக்: தெலுங்கானா மாநிலம் மேடக்கில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் தேதி அன்று இரவு மேடக் கிராம தலைவருக்கு பேரையா என்ற விவசாயியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், "தயவு செய்து என்னுடைய குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் - என்னை இனிமேல் நீங்கள் பார்க்கவே முடியாது" என்று வேகமாக கூறிவிட்டு வைத்துவிட்டார்.
பதறிப்போன தலைவர் பேரையாவின் நிலத்திற்குச் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார் அவர்.
பேரையா மட்டுமல்ல இதுபோன்று 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 2 மாதங்களில் தெலுங்கானாவில் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பருவமழை பொய்த்துப் போனதால், விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டினாலும், பயிரிடுவதற்கான காலம் கடந்ததாலும், கையிருப்புகளும் கரைந்து போனதாலும் விவசாயிகள் இன்னும் கண்ணீர் விட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
" இந்நிலை மாறுவதற்கு வழியே இல்லை" என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் லக்ஷ்மண் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.
" எனக்கு பின்னால் என் மகன் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என நினைத்தேன். ஆனால், அவனுடைய குழந்தைகளுக்காகவாவது நான் நீண்ட நாட்கள் வாழ்ந்து ஆக வேண்டும்" என்று பேரையாவின் தந்தை கூறியுள்ளார்.
இறந்துபோன பேரையாவிற்கு மனைவியும், 7 மற்றும் 5 வயதான இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதே நிலை தொடராமல் இருக்க விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இல்லை எனில் இன்னும் பல பேரையாக்களின் இழப்பு, விவசாயத்தையே அழிந்து போகும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications