நீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக ட்ரான்ஸ்லேட்டர்கள்தான் காரணம்.. மத்திய அமைச்சர்
நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என சிபிஎஸ்இ குற்றம்சாட்டியுள்ளது.
Recommended Video

டெல்லி: நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
வினாத்தாள் குளறுபடியில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வின் போது தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதாக கூறி ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வினாத்தாள் குளறுபடி
இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் தமிழில் எழுதிய அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் இதன் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை 2 வாரத்தில் வெளியிடவும், அதுவரை கவுன்சலிங் நடைமுறைகளை நிறுத்தி வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஎஸ்இ மேல்முறையீடு
இதைத்தொடர்ந்து நீட் கருணை மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. வினாத்தாள் குளறுபடியில் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தகவல்
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அதில் தமிழ் நீட் வினாத்தாள் விவகாரத்தில் தமிழக அரசின் மொழிப்பெயர்ப்பாளர்களே காரணம் என தெவித்துள்ளார்.

தமிழில் மொழி பெயர்த்தனர்
தமிழக அரசு பரிந்துரைத்த மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

குழப்பம் ஏற்படும்
554 மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கினால் மொத்தம் 750 மதிப்பெண்கள் ஆகிவிடும். நீட் தேர்வில் மொத்த மதிப்பெண்ணே 720 தான் என்றும் இதனால் குழப்பம் ஏற்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications