எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக டெல்லியில் மாணவர்கள் போராட்டம்!
டெல்லி: எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் என்ற நாவலில் இடம்பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலய திருவிழா சடங்கு குறித்த பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இதைத்தொடர்ந்து எழுத்தாளர் பெருமாள்முருகன் நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் தன்னுடைய நாவலை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்து கடிதம் கொடுத்தார்.

இதன் பின்னர் பெருமாள்முருகன் என்ற படைப்பாளி செத்துவிட்டான் என்ற அறிக்கையை அவரே முகநூல் கணக்கில் வெளியிட்டார். இதில் வேதனை அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டங்களில் குதித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் முன்பு நேற்று மாணவர் அமைப்புகள் சார்பில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ராஜன் குறை கிருஷ்ணன், ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், மாணவர் தலைவர்கள் வி.லெனின் குமார், கே.பயாஸ் அகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications