காவிரி.. கர்நாடகாவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி வீடு முற்றுகை
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டை கன்னட அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகாவில் பந்த் நடத்தின.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் ராமச்சந்திரன். தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், காவிரி விவகாரம் தொடர்பான இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனைக் கேள்விப்பட்ட கன்னட அமைப்பினர், தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகக் ராமச்சந்திரன் மீது குற்றஞ்சாட்டி அவரின் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்துப் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்திய ராமச்சந்திரன், தனது அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறினார். அதை வெளியிட்டதற்காக மன்னிப்பும் கோரினார். அதன்பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் கர்நாடகத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1991 போன்ற கலவரத்தை சந்திக்க நேரிடும் என்று தமிழர்களின் வீடுகள், நிறுவனங்களில் புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று கன்னட ரக்ஷன வேதிகே என்ற அமைப்பு எச்சரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications