Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்மரக் கடத்தல்... சர்வதேச கடத்தல் மன்னன் அப்துல் நஜீம், 19 தமிழர்கள் கைது : வீடியோ

கடப்பா பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 19 தமிழர்களையும் கர்நாடகாவைச் சேர்ந்த கடத்தல் மன்னன் அப்துல் நஜீமையும் ஆந்திரா போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கடப்பா: கடப்பா பகுதியில் செம்மரம் கடத்திய சர்வதேச கடத்தல் குற்றவாளி உள்பட 20 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 Tamilnadu men arrested in red sanders smuggling case in Andra pradesh

ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் செம்மரம் கடத்திய 20 பேரை ஆந்திர போலீஸ் கைது செய்தனர். அதில், கர்நாடகாவைச் சேர்ந்த செம்மரக் கடத்தலில் சர்வதேச அளவில் ஈடுபடும் அப்துல் நஜீம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மீதி 19 பேர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 31 லட்சம் மதிப்புள்ள 21 செம்மரக் கட்டைகள்,14 செல்போன்கள் மற்றும் கோடாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே செம்மரம் கடத்திய வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் ஆந்திர சிறையில் வாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆந்திர அரசு ஜாமீன் வழங்கவும் மறுத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+