சென்னையில் ஐபிஎல் நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம்... எச்சரிக்கும் தமிமுன் அன்சாரி!
சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி எச்சரித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் மீறி நடத்தினால் வீரர்களை சிறைபிடிப்போம் என்று மஜகவின் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன்அன்சாரி அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியை நடத்தினால் தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிமுன்அன்சாரி கூறியதாவது: நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கேட்டு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். காவிரிக்காக எல்லோருடனும் இணைந்து போராடுவது என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளோம்.

காவிரி விவகாரத்தில் அரசியல் பேதம் பார்க்கக்கூடாது. அந்த வகையில் நாளை தி.மு.க நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து நாங்கள் பங்கேற்கிறோம்.
சென்னையில் வருகின்ற 10ம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசிற்கு எதிராக தமிழக மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். விவசாயிகள் கண்ணீர் விட்டுக் கொண்டிருகிறார்கள்.
குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் போட்டி ஒரு கேடா? அப்படி நடத்தினால் அது தமிழ்நாட்டிற்கே வெட்கக்கேடு.
உடனடியாக தமிழக அரசு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்ய வேண்டும், மீறி நடத்தினால் மனிதநேய ஜனநாயக கட்சியினரும், காவேரி உரிமை மீட்பு குழுவினரும் மைதானத்திற்குள் நுழைந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம். இதை மீறி அங்கு விளையாட வரும் ஐ.பி.எல் வீரர்களை சிறைபிடிப்போம். தமிழக மக்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications