Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

79 நாள்.. தனிஅறையில் மகன் கண்முன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... மந்திரவாதியின் ‛ச்சீ.. ச்சீ’ செயல்

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ஒடிசாவில் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி திருமணமான பெண்ணை 79 நாள் தனிஅறையில் வைத்து மகன் கண்முன்னே பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மந்திரவாதியை போலீசார் தேடும் நிலையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒடிசாவில் பாலாசோர் மாவட்டத்தை சேர்ந்தவர் நடுத்தர வயது பெண். இவருக்கு கடந்த 2017ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணமான புதிதில் கணவன்-மனைவி மற்றும் குடும்பத்தினர் இடையே எந்த பிரச்சனையும் இல்லை.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பண விஷயம் உள்பட சில விஷயங்களில் அடிக்கடி அந்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தினர் நிம்ம்தியான சூழல் இல்லை.

மந்திரவாதியுடன் சந்திப்பு

மந்திரவாதியுடன் சந்திப்பு

இந்நிலையில் கணவரின் குடும்பத்தினர் மயூர்பாஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த எஸ்கே தாரப் என்ற மந்திரவாதியை சந்தித்தனர். மருமகளால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை நீக்கி நிம்மதிக்கு வழி செய்ய வேண்டும் அவர்கள் கூறினர். அதற்கு மந்திரவாதி ஒப்புக்கொண்டார்.

மயக்கமருந்து கொடுத்து...

மயக்கமருந்து கொடுத்து...

மேலும் பிரச்சனையை முற்றிலுமாக நீங்க வேண்டுமானால் அந்த பெண் தன்னுடன் சில மாதங்கள் தங்க வேண்டும் எனக்கூறினார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் கணவரின் குடும்பத்தினர் அவரை வலுக்கட்டாயப்படுத்தினர். ஆனால் அவர் உடன்படவில்லை. இதனால் மயக்கமருந்து கலந்து கொடுத்ததனர். இதனால் அவர் மயங்கினார்.

79 நாள் பலாத்காரம்

79 நாள் பலாத்காரம்

சிறிதுநேரம் கழித்து அவர் கண்விழித்தபோது தனி அறையில் குழந்தையுடன் அந்த பெண் இருந்தார். அருகே மந்திரவாதியும் இருந்தார். அப்போது தான் கணவரின் குடும்பத்தினரின் சதிச்செயலை அவர் அறிந்தார். இதைத்தொடர்ந்து மகன் கண்முன்னே அந்த பெண்ணை மந்திரவாதி பலாத்காரம் செய்து வந்தார். இந்த கொடுமை 79 நாட்களாக நடந்தது.

 செல்போனில் தகவல்

செல்போனில் தகவல்

அறையில் இருந்து பலமுறை தப்பிக்க நினைத்தும் அந்த பெண்ணின் முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மந்திரவாதி தனது செல்போனை அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றார். இதையடுத்து அந்த செல்போன் மூலம் பெண் தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து மீட்கும்படி கூறினார்.

குழந்தையுடன் பெண் மீட்பு

குழந்தையுடன் பெண் மீட்பு

இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தினர் பெண்ணையும், குழந்தையையும் மீட்டனர். போலீசார் சென்றபோது மந்திரவாதி அங்கு இல்லை. இதனால் அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

விசாரணை

விசாரணை

இதுதொடர்பாக போலீசார் பெண்ணின் கணவர், அவரது தம்பி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகின்றனர். இதுதவிர தலைமறைவாக உள்ள மந்திரவாதியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+