ரூ.12,000 கோடி டாடா ஏர்பஸ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய பாதுகாப்பு அமைச்சகம்
பெங்களூர்: இந்திய விமானப் படைக்கு 56 ஏர்பஸ் விமானங்களை தயாரித்து கொடுக்கும் டாடா நிறுவனத்தின் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாதுகாப்பு துறை தொடர்பான பல்வேறு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களில் ரூ. 11 ஆயிரத்து 929 கோடி மதிப்புள்ள அவ்ரோ அதாவது ஏர்பஸ் ஒப்பந்தமும் ஒன்று என்று பாதுகாப்புத் துறை அமைச்சக ஆட்கள் ஒன்இந்தியாவிடம் தெரிவித்துள்ளனர்.

ஏர்பஸ் ஒப்பந்த டென்டர்படி வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஹெச்.ஏ.எல். தவிர வேறு ஒரு இந்திய நிறுவனத்தை கண்டுபிடித்து 16 ஏர்பஸ் விமானங்களை தயாரித்து வழங்கிவிட்டு மீதமுள்ள 40 விமானங்களை தயாரிக்கத் தேவைப்படும் தொழில்நுட்பத்தை அந்நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். விமானங்களை தயாரிக்க டென்டர் கோரிய ஒரே இந்திய நிறுவன் டாடா தான்.
இந்நிலையில் ஒப்பந்தத்தின்படி டாடா-ஏர்பஸ் கன்சார்டியம் 56 ஏர்பஸ் விமானங்களை(ஏர்பஸ் சி295) இந்திய விமானப்படைக்கு வழங்க வேண்டும். ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் 200 கமோவ் ஹெலிகாப்டர்களை பெறுவது, கடற்படைக்கு ரூ.2 ஆயிரத்து 700 கோடியில் மேலும் 6 பிரமோஸ் ஏவுகணைகளை பெறுவது உள்ளிட்டவையும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்களில் அடக்கம்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இரண்டு போயிங் 777இஆர் விமானங்களை விவிஐபிகளுக்கான விமானங்களாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கத் தேவைப்படும் திட்டங்களுக்கு தான் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் தயாரிப்பை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்கும் திட்டத்திற்கு ஹெச்.ஏ.எல். நிறுவனம் துவக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பது பற்று ஹெச்.ஏ.எல். கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications