போச்சே. போச்சே, மோடி டாட்டூவால் ராணுவ வேலை போச்சே: வாலிபர் குமுறல்
Subscribe to Oneindia Tamil
போபால்: பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர்களை மார்பில் டாட்டூ குத்தியிருந்ததால் ராணுவத்தில் சேர்க்க மறுத்துவிட்டனர் என வாலிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் திம்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் சவுரப் பில்கையான்(23). அவர் தனது மார்பில் பிரதமர் மோடி மற்றம் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் பெயர்களை டாட்டூ குத்தியதால் ராணுவ பணி நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
சூரியன், சந்திரன் உள்ள வரை மோடி, சவுகானின் பெயர் வாழும் என்று டாட்டூ குத்தியதால் ராணுவத்தில் என்னை நிராகரித்துவிட்டனர். நான் ராணுவத்தில் சேர 5 முறை முயற்சி செய்தேன்.
டாட்டூவால் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டேன். இது குறித்து மோடி, சவுகானை சந்தித்து கேட்க உள்ளேன் என்றேன்.












Click it and Unblock the Notifications