அமெரிக்க பயணியை பலாத்காரம் செய்யமுயன்ற டாக்சி டிரைவர் கைது
லக்னொ: நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அமெரிக்க சுற்றுலா பயணியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்திருந்த பெண்மணி, டெல்லியில் இருந்து டாக்சியொன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷிகேஷுக்கு சென்றுகொண்டிருந்தார்.
டாக்சியை சாமே சிங் என்பவர் ஓட்டிச் சென்றார். டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் டாக்சி சென்றபோது, உணவகம் ஒன்றின் அருகே திடீரென காரை சாலையோரம் நிறுத்திய டிரைவர், பின்பக்கம் பாய்ந்து சென்று அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.
ஆனால் அமெரிக்க பெண் பெரும் போராட்டம் நடத்தி டிரைவரிடம் இருந்து தப்பியோடிவிட்டார். வேறு ஒரு காரை பிடித்து ரிஷிகேஷ் சென்றடைந்த அவர், இதன்பிறகு போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரை பதிவு செய்த போலீசார் டாக்சி டிரைவரை கைது செய்துள்ளதாக போலீஸ் எஸ்.பி. சர்வண்குமார் இன்று தெரிவித்தார்.