அமெரிக்காவில் டிசிஎஸ் ஊழியரின் 2 மாத ஆண் குழந்தையை எடுத்துச் சென்ற அதிகாரிகள்
ஜெய்பூர்: அமெரிக்காவில் டிசிஎஸ் ஊழியரான இந்தியரின் 2 மாத ஆண் குழந்தையை அவரிடம் இருந்து பிரித்துள்ளனர் அதிகாரிகள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் ஆசிஷ் பாரீக். டிசிஎஸ் ஊழியரான அவர் ப்ராஜெக்ட் விஷயமாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் தனது கர்ப்பிணி மனைவியுடன் நியூஜெர்சி நகருக்கு சென்றார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி அவரது மனைவி விதிஷா அஷ்வித் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். டிசம்பர் 23ம் தேதி மருத்துவமனைக்கு செல்லத் தயாராகியபோது விதிஷா கையில் இருந்து குழந்தை கீழே விழுந்தது என்று கூறப்படுகிறது. கீழே விழுகையில் அதன் தலை டிவி ஸ்டாண்டில் பட்டு பின்னர் தரையில் பட்டுள்ளது.

இதில் குழந்தையின் தலையில் அடிபட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதன் பெற்றோர்கள் தான் தாக்கியிருப்பார்களோ என்ற சந்தேகத்தில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து குழந்தையை பெற்றோரிடம் இருந்து பிரித்து வளர்ப்பு தாயின் கவனிப்பில் விட்டுள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை தாங்கள் தாக்கவில்லை என்றும், தங்களை பற்றி தவறாக புரிந்து கொண்டு அதிகாரிகள் குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டதாகவும் ஆசிஷ் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் தலையிட்டு குழந்தையை மீட்டுத் தருமாறு அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குழந்தையை அதிகாரிகள் எடுத்துச் சென்றதை ஜெய்பூரில் வசிக்கும் ஆசிஷின் சகோதரர் அபிஷேக் பாரீக் தெரிவித்துள்ளார்.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications