தெலுங்கானாவை உருவாக்கினால் ரத்த ஆறு ஓடும்: முன்னாள் அமைச்சர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கினால் ஆந்திராவில் ரத்த ஆறுதான் ஓடும் என்று அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் கே.சிவபிரசாத் ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கும் பணிகளில் மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆந்திர அரசியல் அனைத்து கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் குழுவும் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் குண்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய தெலூங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான முன்னாள் உள்துறை அமைச்சர் சிவபிரசாத் ராவ், தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. இதை மீறி தெலுங்கானாவுக்கான மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால் வன்முறை வெடிக்கும். ஆந்திராவில் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications