மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்திருக்கே: துள்ளிக் குதிக்கும் டீக்கடைக்காரர்
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்: வதோதராவில் மோடியின் வேட்புமனுவை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரனாசி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் வதோதராவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது அதை உள்ளூரைச் சேர்ந்த டீக்கடைக்காரரான கிரண் மஹிடா என்பவர் முன்மொழிந்து கையெழுத்திட்டார்.

இந்நிலையில் மோடி தான் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு வருமாறு கூறி கிரண் மஹிடாவுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளார்.
இது குறித்து கிரண் கூறுகையில்,
மோடிஜியின் விழாவுக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளது. இதனால் நான் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications