பதவி ஏற்கும் முன்பே வாரனாசியில் வேலையை துவங்கிய மோடி அன்ட் டீம்
லக்னோ: வாரனாசியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 60 மேம்பாலங்கள் கட்ட பாஜக குழு மோடிக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலம் வாரனாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே அவர் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து வாரனாசி தொகுதியை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கள் குறித்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை மோடி அமைத்தார்.
கங்கை நதியை சுத்தம் செய்தல், நகருக்குள் மற்றும் கங்கை நதியின் கரைகளை சேர்க்க என்று மொத்தம் 60 மேம்பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
பாஜகவினர் அடங்கிய அந்த குழு நகரில் உள்ள மக்கள், அதிகாரிகள், வல்லுநர்கள் ஆகியோரை அணுகி நகரை மேம்படுத்த அவர்களின் அறிவுரையை கேட்டுள்ளது.
அடுத்த 100 நாட்கள் மற்றும் ஒரு ஆண்டுக்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் குறித்து பாஜகவின் தொலைத்தொடர்பு குழு ஆன்லைனில் மக்களிடம் அறிவுரை கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications