டீஸ்டா செதல்வாட்டை அக்.15 வரை கைது செய்ய தடை நீடிப்பு- சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: நிதி மோசடி வழக்கில் குஜராத் சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த மதக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்காக போராடி வருபவர் டீஸ்டா செதல்வாட். இவரது என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெற்று இந்திய அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாக குஜராத் அரசு புகார் செய்தது.

இதனைத் தொடர்ந்து இந்த புகாரை சி.பி.ஐ. விசாரித்து வழக்கு பதிவு செய்தது. அத்துடன் டீஸ்டாவின் சபராங் என்.ஜி.ஓவுக்கு வெளிநாட்டு நிதி உதவி பெறுவதற்கு கொடுத்த அனுமதி உரிமத்தை உள்துறை அமைச்சகம் ரத்து செய்திருந்தது.
இதனிடையே குஜராத் மதக் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் ரூ.1.5 கோடி அளவில் டீஸ்டா செதல்வாட், அவரது கணவர் ஜாவித் ஆனந்த் உள்ளிட்டோர் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கை அகமதாபாத் போலீசார் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் டீஸ்டா, அவரது கணவர் ஜாவித் ஆகியோருக்கு முன் ஜாமீன் அளிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கியதுடன் இருவரையும் கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டீஸ்டா, அவரது கணவர் ஜாவித் ஆனந்த் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை அக்டோபர் 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இதனால் நிதி மோசடி வழக்கில் அக்டோபர் 15-ந் தேதி வரை டீஸ்டா செதல்வாட்டை போலீசார் கைது செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications