டிசம்பரில் கண்டிப்பாக தேஜாஸுக்கு எப்.ஓ.சி. அளிக்கப்படும்: ஏடிஏ தலைவர்
பெங்களூர்: தேஜாஸ் இலகுரக விமானத்தை இயக்கத் தேவையான இறுதி ஒப்புதல் சான்று வரும் டிசம்பர் மாதம் அளிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏடிஏ இயக்குனர் பி.எஸ். பாலசுப்பிரமணியம் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
அனைத்து திட்டங்களும் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. தேஜாஸ் விமானத்திற்கு இறுதி ஒப்புதல் சான்று வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும். ஏலஹன்காவில் நடக்கும் விமான கண்காட்சியில் எல்.எஸ்.பி.-3, எல்.எஸ்.பி.-4 ரக விமானங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும். எஸ்பி-1 மற்றும் என்.பி-2 விமானங்கள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன.

தேஜாஸில் உள்ள அனைத்து சிஸ்டம்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. என் மிஷனை நிறைவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 2001ம் ஆண்டில் இருந்து விமானத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தேஜாஸை இயக்குவது தனி சந்தோஷம் என்று தற்போது விமானிகள் கூறுகிறார்கள்.
தேஜாஸின் செயல்திறனை மேலும் மேம்படுத்த உள்ளோம். சீரிஸ் ப்ரொடக்ஷனில் விமானத்தில் குண்டுகள், ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் வசதி செய்ய உள்ளோம். முதல்கட்டமாக 20 தேஜாஸ் விமானங்கள் வரும் 2018-2019ம் ஆண்டில் விமானப்படையிடம் அளிக்கப்படும்.
விமான கண்காட்சி முடிந்த பிறகு தேஜாஸ் விமானம் பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதுவரை தேஜாஸ் விமானத்தை அனுபவம் உள்ள டெஸ்ட் விமானிகள் மட்டுமே இயக்கியுள்ளனர். இந்நிலையில் விமானம் இந்திய விமானப்படை விமானிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர்கள் அதில் சில மாற்றங்களை செய்ய விரும்பினர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப விமானத்தில் மாற்றம் செய்து வருகிறோம் என்றார்.
தேஜாஸ் விமானத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்க காலதாமதமாகி இறுதியாக டிசம்பரில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications