தெலுங்கானா மாநிலத்தின் புதிய வாகனக் குறியீடு “டிஎஸ்” – மத்திய அரசு ஒப்புதல்

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா நாட்டின் 29வது மாநிலமாக உதயமாகிவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்துக்கான தனியான வாகன பதிவுக் குறியீடாக டிஜி என்ற குறீயீட்டை மத்திய அரசு வழங்கியது.
ஆனால் தெலுங்கானா மாநில அரசு டிஎஸ் என்ற குறியீட்டை பயன்படுத்த கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற மத்திய அரசு, டி.எஸ். குறியீட்டிற்கு அனுமதியளித்தது.
இதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் புதிய வாகனங்களுக்கான பதிவுகள் துவங்கியுள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வாகனங்கள் டிஎஸ் என்ற குறியீட்டுடன் பதிவு செய்யப்பட்டன.
தெலுங்கானாவில் உள்ள ஒன்பது மாவட்டங்களிலும் இந்த குறியீடு பயன்படுத்தப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் மகேந்திரரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் மாநிலத்தில் தற்போது 70 லட்சம் வாகனங்கள் உள்ளது. இவற்றில் பெரும்பாலனவை ஏபி என்ற குறியீட்டை பயன்படுத்தி வருகிறது. இதனை மாற்றும் திட்டம் தற்போதைக்கு இல்லை எனவும், நான்கு மாதங்களில் அனைத்து வாகனங்களும் புதிய குறியீ்ட்டிற்கு மாற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications