தெலுங்கானா முதல்வருடன் அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை... ஸ்டாலின் பேட்டி
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3-ஆவது அணி அமைப்பது குறித்து இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
சென்னை: அரசியல் சூழ்நிலைகள் குறித்து தெலுங்கானா முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார். அதன் முதல் படியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து அவரிடம் ஆதரவு கேட்டார்.
அவரும் ஆதரிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி 3-ஆவது அணி குறித்து ஆதரவு கேட்டிருந்தார்.

சென்னை வருகை
இந்நிலையில் 3-ஆவது அணி அமைப்பதில் தீவிரம் காட்டப்படுகிறது. இதுபோல் முன்னாள் பிரதமர் தேவ கௌடாவையும் சந்தித்து சந்திரசேகர ராவ் ஆதரவு கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பிரதான கட்சியாக திகழும் திமுகவின் ஆதரவை பெறுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு இன்று மதியம் சந்திரசேகர ராவ் வந்தார்.

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதைத் தொடர்ந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து 3-ஆவது அணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஸ்டாலின் பேட்டி
இந்த சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலினும் சந்திரசேகர ராவும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மு.க.ஸ்டாலின் கூறுகையில், அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுதல், மாநிலங்களுக்கு கூடுதல் நிதி குறித்து விவாதித்தோம்.

அரசியலை அணுகுவது
ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்வரும் அரசியல் சூழலை எப்படி அணுகுவது என்பது குறித்து விவாதித்தோம் என்றார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில் 3-ஆவது அணி, 4-ஆவது அணியெல்லாம் அமைக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை . நாங்கள் 3-ஆவது அணி அல்ல. செய்தியாளர்கள்தான் இதுபோன்ற வதந்தியை பரப்புகின்றனர் என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications