தெலுங்கானாவில் தப்பியோட முயற்சித்த 5 "தெஹ்ரீக் கலாபா இ" தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாக 5 தீவிரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டதாக 5 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு வாரங்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தீவிரவாதிகள் அனைவரும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஹர்கத் உல் ஜிஹாதி இஸ்லாமி இயக்கத்தின் ஆதரவு பெற்ற தெஹ்ரீக் கலாபா இ இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

Telangana: Five alleged SIMI activists shot dead after escape bid

இவர்களில் முக்கியமானவன் விகரூதீன், குஜராத் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டியவன். ஹைதராபாத்தில் தொடர் தாக்குதல்களையும் பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை படுகொலை செய்யவும் இவன் திட்டம் தீட்டியிருந்தான்.

இத்தீவிரவாதிகள் 5 பேரும் இன்று வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்துவரப்பட்டனர்.

Telangana: Five alleged SIMI activists shot dead after escape bid

அப்போது போலீசாரைத் தாக்கி ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட அனைவரும் முயற்சித்துள்ளனர். இந்த மோதலில்தான் 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Telangana: Five alleged SIMI activists shot dead after escape bid

சுட்டுக் கொல்லப்பட்ட விகரூதீன், சையத் அம்ஜத், ஹனீப், ஜாஹிர் மற்றும் இர்பான் அலி ஆகிய அனைவருமே தெஹ்ரீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 5 பேரையும் வாரங்கல் சிறையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றுவதற்காக போலீசார் அழைத்து வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+