அதிகரிக்கும் அனல் காற்று பலி - தெலுங்கானா மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கை
ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வெயிலில் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று அதிகபட்சமாக 116 டிகிரி வரை வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள அடிலாபாத், வாராங்கல், ஹைதராபாத், கம்மம், மகாபூப்நகர், நலகொண்டா, நிஜாமாபாத், கரீம்நகர் பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் உக்கிரம் நீடித்து வருகிறது. இது வரை இந்த இரு மாநிலங்களிலும் வெயிலுக்கு 470 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில் மேலும் 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வெயிலில் மக்கள் யாரும் நடமாட வேண்டாம் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications