சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... தூய்மை இந்தியாவுக்காக பாட்டு பாடிய சச்சின்!
மும்பை: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர், தூய்மை இந்தியா திட்டத்திற்காக பாடல் பாடியுள்ளார்.
இந்தியாவை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மோடி பிரதமராகப் பதவியேற்றவுடன் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். சச்சின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை இந்த திட்டத்திற்கு தூதுவராக நியமித்தார்.
பிரபலங்கள் பலரும் துடைப்பத்துடன் போஸ் கொடுத்து, திட்டத்தை பிரபலப்படுத்தினர்.
இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்திற்காக சச்சின் டெண்டுல்கர் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் பதிவு செய்வதுபோல் உள்ள போட்டோவை தனது பேஸ்புக் பக்கத்தில் சச்சின் வெளியிட்டுள்ளார். இதில் சச்சினுடன் சங்கர் மகாதேவன் மற்றும் பிரசூன் ஜோஷி, பபூல் சுப்ரியோ ஆகியோர் உள்ளனர்.
ஆனால், சச்சின் பாடிய பாடல் வரிகள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.