ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்... காங்- மஜ்லீஸ் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்- போலீஸ் தடியடி!
ஹைதராபாத்: தெலுங்கானாவின் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மஜ்லீஸ் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
காங்கிரஸுடன் நீண்டகாலம் கூட்டணி கட்சியாக நீடித்து வந்தது மஜ்லீஸ் கட்சி. தற்போது நடைபெற்றுவரும் கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் பரம வைரிகளாக மோதி வருகின்றன.

பழைய ஹைதராபாத்தின் மீர்செளக் பகுதியில் நேற்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் முகமது கெளஸுக்கும் மஜ்லீஸ் எம்எல்ஏ பாஷா குவாதிரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் உத்தம்குமார் ரெட்டி, ஹைதராபாத் மாநாகராட்சி காங்கிரஸ் தலைவர் சபீர் அலி ஆகியோர் மீர்செளக் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸியும் அங்கு வந்தார். இரு கட்சிகளின் தலைவர்களும் ஒரே நேரத்தில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இருதரப்புக்கும் இடையே தொடங்கிய வாக்குவாதம் மோதலாகவும் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் மஜ்லீஸ் கட்சியின் கூட்டு சதியால்தான் இத்தகைய பதற்றமே ஏற்பட்டது; அவர்களைப் பொறுத்தவரையில் மாநகராட்சி தேர்தலில் எப்படியும் வெல்ல வேண்டும் என நினைக்கின்றனர்.
எங்களை ஓவைசியும் அவரது ஆதரவாளர்களும் தாக்கினர். என்னுடைய காரை சேதப்படுத்தினர். எங்கள் மீதான இத்தாக்குதல் குறித்து தனியே புகார் கொடுத்துள்ளோம் என்றார். இதன் பின்னர் நேற்று மாலை டிஜிபி அலுவலகம் முன்பாக காங்கிரஸ் தொண்டர்களைத் தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே மற்றொரு இடத்தில் மஜ்லீஸ் கட்சியினர், தெலுங்கானா துணை முதல்வர் மமூத் அலியின் மகன் ஆசாம் அலியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மஜ்லீஸ் எம்எல்ஏ அகமது பலாலாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
காங்கிரசுக்கு ஒதுக்க சொல்வதா? அண்ணா அறிவாலயத்தில் அடித்துக்கொண்ட கிள்ளியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications