காஷ்மீரில் மீண்டும் அட்டூழியம்: தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் பலி- 2 பேர் படுகாயம்!
பாரமுல்லா, ஜம்மு காஷ்மீர்: யூரி தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ராணுவ முகாமைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது ராணுவத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பாரமுல்லா நகரில் உள்ள ராணுவ முகாமைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த ராணுவ முகாம் உள்ளது. 46 ராஷ்டிரிய ரைபிள் படையின் முகாம் இது. இங்கு இன்று இரவு 10.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பாதுகாப்புப் படையினர் அவர்களுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டை தொடருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 வாரங்களுக்கு முன்புதான் யூரியில் உள்ள ராணுவ முகாமை தீவிரவாதிகள் தாக்கினர். அதில் 19 ராணுவத்தினர் வீர மரணமடைந்தனர். யூரியும் பாரமுல்லா மாவட்டத்தில்தான் உள்ளது.
இந்த சம்பவத்தால் வெகுண்ட இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமையன்று நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை சரமாரியாக தாக்கி அழித்தது. இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகும் தீவிரவாதிகள் துணிச்சலாக ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு முனைத் தாக்குதல்
தீவிரவாதிகள் இரு முனைகளிலிருந்து ராணுவ முகாமைத் தாக்கியுள்ளனர். ஒரு பிரிவு, குல்னார் பூங்காவிலிருந்து ராணுவ முகாமைத் தாக்கியது. இன்னொரு பிரிவு ராணுவ முகாமின் முக்கிய நுழைவாயிலில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கூறுகிறது.
பாதுகாப்புப் படையினர் சுதாரிப்பாக செயல்பட்டதால் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகளால் ஊடுறுவ முடியாமல் போய் விட்டது. அந்த வகையில் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளின் நோக்கத்தை தவிடு பொடியாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications