7-வது ஊதிய கமிஷன் அறிக்கை தாக்கல் :மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 சதவீத சம்பள உயர்வு !

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வருகிற 19ம் தேதி 7-வது ஊதிய குழுவின் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 15 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7-வது ஊதிய கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி ஊதிய கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும். இதன்படி 6-வது ஊதிய குழுவின் சிபாரிசு, கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.

the 7th Central Pay Commission submit on 19th november

அதன் பின்னர் 7-வது ஊதிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் வர்த்தக பிரிவினர், நிறுவனங்கள், பாதுகாப்பு துறையினர் மற்றும் அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, அறிக்கை தயாரித்தனர். இந்த அறிக்கை வியாழக்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் சமர்ப்பிக்கப்படும் என்று குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தெரிவித்தார்.

மத்திய அரசின் பரிசீலனைக்குப் பின்னர் 7 வது ஊதிய கமிஷனின் பரிந்துரைகள் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+