பெங்களூரில் தலைமறைவாக இருந்த 'போடோ' தீவிரவாதிகள் 4 பேர் அதிரடி கைது!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: வடகிழக்கு மாநிலத்தில் இருந்து வந்து பெங்களூரில் தலைமறைவாக போடோ தீவிரவாதிகள் நால்வர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாமை சேர்ந்த போடோ தீவிரவாதிகள் சிலர் பெங்களூரில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அசாம் போலீசார், பெங்களூரு காவல்துறை உதவியுடன், கங்கதகாவலி என்ற இடத்தில் தீவிரவாதிகள் 4 பேர் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைதானவர்கள், தோனார் பசுமத்ரி, சந்தன் பசுமத்ரி, நசீன், ஜீபால் நர்சரி என்று தெரியவந்துள்ளது. இவர்களை போல மேலும் பல தீவிரவாதிகள் பெங்களூரில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கைதான நால்வரும், பெங்களூர் அடுத்த பிடதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், வேலை பார்த்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications