மேற்குவங்க சட்டசபைத் தேர்தல்: 43 வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ் !
கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபைக்கு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 6 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேற்குவங்க மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி மே 5-ந் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க., காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 90 இடங்களில் போட்டியிடுகிறது.
மேற்குவங்க மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மனாஷ் புனியா, மேற்கு மிட்னாபூரின் சபாங்க் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது எம்.எல்.ஏ-க்களாக உள்ளவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் இடதுசாரி முன்னணி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் டி.பி.ராய் நிராகரிக்கப்பட்டார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications