ராகுல் கண் அடித்ததை நாடே பார்த்து விட்டது... பதிலுரையில் பதிலடி கொடுத்த மோடி!
ராகுல்காந்தி இன்று கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி: ராகுல்காந்தி இன்று கண் அடித்ததை இந்த நாடே பார்த்துவிட்டது என பிரதமர் மோடி கிண்டலடித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலளித்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்மறை அரசியலை அம்பலப்படுத்திவிட்டன என்று கூறினார். அதிகாரத்தில் அமர வேண்டியது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று பேசினார்.

மக்களால்தான் முடியும்
மக்களின் ஆதரவோ, உறுப்பினர் பலமோ இல்லாமல் தீர்மானம் கொண்டுவந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 125 கோடி மக்கள் மட்டுமே தம்மை பதவியில் இருந்து அகற்றமுடியுமே தவிர வேறு யாரும் அல்ல என்று பேசினார்.

நாடே பார்த்துவிட்டது
தம்மை பதவியில் இருந்து அகற்ற ஏன் அவசரம் என்றும், ஜனநாயகத்தில் பொறுமை தேவை என்றும் கூறினார். மேலும் ராகுல்காந்தி கண் அடித்ததை இந்த நாடே பார்த்திருக்கிறது என்றும் மோடி சாடினார்.

கண் அடித்த ராகுல்
முன்னதாக தனது அனல்பறக்கும் உரைக்கு பிறகு மோடியை கட்டிப்பிடித்த ராகுல் தனது இருக்கைக்கு சென்ற பின்னர் இடது புறம் பார்த்து கண் அடித்து சிரித்தார்.

ராகுல் குற்றச்சாட்டுக்கு பதில்
அதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications