முந்தைய காங்கிரஸ் அரசு மீதான தீய பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது.. மன்மோகன் சிங் பளீச்!
முந்தைய காங்கிரஸ் அரசு மீதான தீய பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முந்தைய காங்கிரஸ் அரசு மீதான தீய பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியான 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. குற்றச்சாட்டுக்களை சிபிஐ நிரூப்பிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தீர்ப்பு குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிரான தீய பரப்புரை முடிவுக்கு வந்துள்ளது என்று அவர் கூறினார். மேலும் 2ஜி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும் மன்மோகன் சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications