மோசமாக கலாய்க்கிறார்கள்.. சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த முடிவு.. ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல்
சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: சமூக வலைதளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிரிதி இராணி அதிர்ச்சி தகவல் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லியில் நடந்த பத்திரிக்கை நிகழ்வு ஒன்றில் அவர் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார். தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இராணியின் இந்த அறிவிப்பு நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயத்தில் சமூக வலைதளங்கள் நல்ல வகையில் உதவுவதாகவும், முக்கியமான விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பயன்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

கலாய்க்கிறார்கள்
சமூக வலைதளங்கள் குறித்து பேசிய போது ''டிவிட்டரில் அரசையும், அரசியல்வாதிகளையும் மோசமாக கலாய்க்கிறார்கள். விதவிதமாக எதிர்த்து பேசுகிறார்கள். இதை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த பக்கம்
இதன் காரணமாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை பார்ப்பதே இல்லை என்று ஸ்மிரிதி இராணி தெரிவித்து இருக்கிறார். முக்கியமான தகவல்களை பார்க்க மட்டுமே டிவிட்டர் பக்கம் செல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு என்ன மாதிரியான விஷயங்கள் நடக்கிறது என்று தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல் பிரச்சனை
மேலும் ''என்னுடைய முதல் பிரச்சனையே, இப்போது எல்லோருக்கும் பேச இடம் கிடைத்துவிட்டது என்பதுதான். தொழில்நுட்பம் அரசை கட்டுப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. செய்திகள் கூட சமூக வலைத்தளத்தை நம்பித்தான் இருக்கிறது'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்கப்படும்
முக்கியமாக ''இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றுள்ளார். அரசுக்கு எதிராக பேசப்படும் விஷயங்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் இதை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை பின்பற்றுவோம்'' என்று ஸ்மிரிதி இராணி தெரிவித்து இருக்கிறார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
16 வயசு பிள்ளைங்களுக்கு ஷாக்.. இனி இன்ஸ்டா யூஸ் பண்ண முடியாது! அதிரடியாக உத்தரவிட்ட அரசு! என்னாச்சு?












Click it and Unblock the Notifications