பதான்கோட் தாக்குதல்: சிறப்புப் படையினருக்கு பதில் கமாண்டோ படை அழைக்கப்பட்டது ஏன்?- வெடித்தது சர்ச்சை
டெல்லி: பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாத எதிர் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்ற ராணுவத்தின் சிறப்பு படைகளை அழைக்காமல், என்.எஸ்.ஜி. என்னும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களை அழைத்தது ஏன் என்ற கேள்வி பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ந்தேதி முதல் 4 நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள தீவிரவாத எதிர் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்ற ராணுவத்தின் சிறப்பு படைகளை அழைக்காமல், என்.எஸ்.ஜி. என்னும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களை அழைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சோதனையான சூழ்நிலையில், தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதற்கு ராணுவத்தை அழைத்திருந்தால் அவர்கள் இன்னும் திறம்பட நிலைமையை கையாண்டிருப்பார்களே? என பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராணுவத்தின் 29 காலாட்படை பிரிவு பதன்கோட்டைத் தான் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. அங்கு 40 ஆயிரம் துருப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications