பதான்கோட் தாக்குதல்: சிறப்புப் படையினருக்கு பதில் கமாண்டோ படை அழைக்கப்பட்டது ஏன்?- வெடித்தது சர்ச்சை
டெல்லி: பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, தீவிரவாத எதிர் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்ற ராணுவத்தின் சிறப்பு படைகளை அழைக்காமல், என்.எஸ்.ஜி. என்னும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களை அழைத்தது ஏன் என்ற கேள்வி பாதுகாப்புத்துறை வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத் தளத்திற்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2ந்தேதி முதல் 4 நாட்களாக தொடர் தாக்குதலில் ஈடுபட்டுவந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கு இடையே நீடித்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு, அந்த பிராந்தியத்தில் உள்ள தீவிரவாத எதிர் தாக்குதலில் நிபுணத்துவம் பெற்ற ராணுவத்தின் சிறப்பு படைகளை அழைக்காமல், என்.எஸ்.ஜி. என்னும் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களை அழைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சோதனையான சூழ்நிலையில், தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவதற்கு ராணுவத்தை அழைத்திருந்தால் அவர்கள் இன்னும் திறம்பட நிலைமையை கையாண்டிருப்பார்களே? என பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
ராணுவத்தின் 29 காலாட்படை பிரிவு பதன்கோட்டைத் தான் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. அங்கு 40 ஆயிரம் துருப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications