அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.0 ஆக பதிவு
அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
நிக்கோபார்: அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இன்று காலை 9 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் கட்டிடங்கள் ஏதேனும் இடிந்ததா என்று தகவல் வெளியாகவில்லை. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகி இருக்கிறது.
இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. நிக்கோபார் கடல்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இந்த வருடம் அந்தமானில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவாகும்.