மத்தியப் படைகள் தயாராக உள்ளது.. தேவைபட்டால் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படும்..உள்துறை அமைச்சகம்
தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்ப தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Recommended Video

டெல்லி: தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்ப தயார் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த அதிர்ச்சி துக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் இன்றும் போலீசார் துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியை நடத்தி வருகின்றனர்.

இளைஞர் கொலை
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் போலீசார் இன்றும் இரண்டாவது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை
5க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராஜீவ் கவுபா
இதனால் இரண்டாவது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக செயலளார் ராஜீவ் கவுபா தமிழக தலைமை செயலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

மத்திய படைகள்
அப்போது தூத்துக்குடியில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து அவர் கேட்டறிந்தார். தேவைப்பட்டால் தூத்துக்குடிக்கு மத்திய படைகளை அனுப்பி அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய படைகள் தயார்
மத்தியப் படைகள் தயாராக இருப்பதாகவும் ராஜீவ் கவுபா கூறியுள்ளார். தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தேவையான உதவிகளை செய்ய தயார் என்றும் உள்துறை அமைச்சக செயலாளர் கவுபா தெரிவித்துள்ளார்.

போலீஸ் ஒடுக்க முடியவில்லை
இதனிடையே தூத்துக்குடிக்கு துணை ராணுவம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி போராட்டத்தை போலீஸ் ஒடுக்க முடியவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேண்டுகோளை ஏற்று
தமிழக போலீசால் முடியவில்லை என்பதால் துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்புகிறது. தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்புகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications