100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. 17 பேர் பரிதாப பலி..
ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து உருக்குலைந்ததில் அதில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அல்மோரா மாவட்டம், பிதோராகிராம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக திடீரென்று 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 40 பேரில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் ஹரீஷ் ராவத், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1லட்சம் நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 20,000 ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications