பணக்கார டெல்லி, ஏழை டெல்லி என இரண்டாக பிரிந்து கிடக்கும் தலைநகரம்.. நிதீஷ் குமார் வேதனை
டெல்லி: தலைநகர் டெல்லி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. ஏழைகள் ஒரு பக்கமாகவும், பணக்காரர்கள் இன்னொரு பக்கமும் இங்கு உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
டெல்லியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், டெல்லி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இங்கு பணக்காரர்கள் ஒருபக்கம் ஜொலித்தபடி உ்ளனர். பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பல பகுதிகளை இங்கு பார்க்க முடிகிறது. இன்னொரு புறமோ ஏழைகள், பரம ஏழைகள் நிரம்பி வழியும் பகுதிகள் உள்ளன. அங்கு குடிநீர் கிடையாது, நல்ல சாலைகள் கிடையாது, மின்சாரம் கிடையாது, கழிவு நீர் வசதிகள் கிடையாது. எனவே டெல்லியை பணக்கார டெல்லி, ஏழை டெல்லி என்று பிரித்துக் கூறும் அளவில் நிலைமை உள்ளது.

பீகாரிலிருந்து வந்த பலர்தான் டெல்லியை வளர்த்து ஆளாக்கியவர்கள். ஆனால் அவர்கள் இன்னும் ஏழைகளாகவே உள்ளனர். பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர்களும் இந்த தலைநகரத்தின் செழுமைக்காக பாடுபட்டவர்கள். அவர்களுக்கும் விமோச்சனம் இல்லை.
பீகார், பூர்வாஞ்சலைச் சேர்ந்தவர்கள் இங்கு வேலை செய்யாமல் நிறுத்தினால், டெல்லியே ஸ்தம்பித்துப் போய் விடும் என்றார் நிதீஷ் குமார்.












Click it and Unblock the Notifications