இந்தியாவில் 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் தான்!
டெல்லி: இந்தியாவில் வசித்து வரும் மக்களில் 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி வெளியி்ட்டு்ள்ள அறிக்கையி்ல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாது ,"நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 15.38 சதவீதமாக உள்ளது. அதேசமயம் போலீசாரின் வலிமை 0.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 2002 ஆம் ஆண்டில் 718 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை மாறி 2012 ஆம் ஆண்டு 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை காணப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2002 இல் போலீசாரி்ன் எண்ணிக்கை 3.48 லட்சமாக இருந்தது. அவை 2012 ஆம் ஆண்டில் 4.62 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , வகுப்புவாத வன்முறை போன்றவை அதிகரித்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆராய்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் அறிக்கை படி 2002 இல் 100 சதுர கிலோ மீட்டருக்கு 46.39 போலீசார் என்ற நிலை மாறி 2012 இல் அவை 69.76 ஆக அதிகரித்துள்ளது.
புவியியல் அடிப்படையில் 1.43 சதுர கி.மீ., தூரத்திற்கு ஒரு போலீஸார் பாதுகாப்பு வேண்டும். ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் அவை 50.38 சதவீதம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications