ரயில்வே பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்: அமைச்சர் சுரேஷ் பிரபு
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது ரயில்வே பட்ஜெட் இது. முதல் ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை தற்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார்.

இது குறித்து சுரேஷ் பிரபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கும் வகையில் இந்த ரயில்வே பட்ஜெட் இருக்கும். ரயில்வே துறையின் நிலை சரியாக இல்லாதபோதிலும் மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை நிறைவேற்றி வைக்கும் வகையிலேயே பட்ஜெட்டை தயார் செய்துள்ளோம் என்றார்.
சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications