மகளிடம் பேச வேண்டும்: யாகூப் மேமனின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அதிகாரிகள்
நாக்பூர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமனின் கடைசி ஆசையை சிறை அதிகாரிகள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
1993ம் ஆண்டு மும்பையில் 13 இடங்களில் குண்டு வெடித்த வழக்கில் யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாக்பூர் மத்திய சிறையில் இன்று அவர் தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்படும் முன்பு அவரிடம் சிறை அதிகாரிகள் உங்களின் கடைசி ஆசை என்ன என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் என் மகளுடன் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறை அதிகாரிகள் மேமன் தனது 21 வயது மகளுடன் போனில் பேச ஏற்பாடு செய்துள்ளனர். மகளுடன் பேசிய பிறகு அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
யாகூப் மேமனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. நாக்பூர் மத்திய சிறையில் கடந்த 31 ஆண்டுகளில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் யாகூப் மேமன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேமனை தூக்கிலிட்டதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications