For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 9 பேர் பலி

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த ரயில் தீ விபத்தில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

மும்பை பந்த்ராவிலிருந்து நள்ளிரவு 12 மணியளவில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்குப் புறப்பட்டுச் சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.15 மணியளவில் டகானு ரோடு நிலையத்தை கடந்த சில நிமிடங்களில், ரயிலின் 3 பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன.

இதில் பயணிகள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பல பயணிகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Three bogies of Mumbai-Dehradun Express catch fire, 9 charred to death

விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

English summary
In an unfortunate incident, at least seven people were charred to death when fire broke out in three bogies of Mumbai-Dehradun Express near Dahanu in Maharashtra's Thane district, early Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X