அந்தமான் ராஸ் தீவு சுபாஷ் சந்திரபோஸ் தீவாக பெயர் மாறியது… நேதாஜியின் கனவை நனவாக்கிய மத்திய அரசு
போர்ட் பிளேயர்: அந்தமான் நிகோபாரில் நீல், ஹேவ்லாக் உள்ளிட்ட 3 தீவுகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப்போரின் போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றி அதன்பின் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்தமான் விடுவிக்கப்பட்டதாக பிரகடனம் செய்து நேதாஜி சந்திரபோஷ் கடந்த 1943ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி போர்ட் பிளையரில் தேசியக் கொடியை ஏற்றினார்.

அப்போது அந்தமான் நிகோபர் தீவுகளை சாஹேத் மற்றும் சுவராஜ் தீவுகளாக பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நேதாஜி விரும்பினார். இதுகுறித்து நேதாஜியின் உறவினரும், மேற்கு வங்க பாஜக துணைத் தலைவருமான சந்திர குமார் போஸ், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார்.
அதன்படி, ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரும், நீல் தீவுகளுக்கு ஷகீத் தீப் தீவு என்று பெயர் மாற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஹேவ்லாக் தீவுகளுக்கும் பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந் நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஜ் சந்திரபோஸ், அந்த மான் நிகபோர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்த 75-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர், மரினா பூங்காவுக்கு சென்று, அங்கு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அந்தமான் நிகோபாரில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு, ஹேவ்லாக் தீவுகளுக்கு முறையே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீப், ஷாஹித் தீப் மற்றும் ஸ்வராஜ் தீப் என மோடி பெயர் சூட்டினார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications