ஆமைகளைப் பையில் போட்டு கடத்திய 3 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக ஆமைகளைக் கடத்த முயன்ற மூன்று பெண்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சீல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் சட்டவிரோதமாக ஆமைகள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆமைகளைக் கடத்த முயன்ற 3 பெண்கள் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மூவரும் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இப்பெண்கள் உத்திரப்பிரதேசத்திலுள்ள உன்னாவோ மாவட்டத்தில் இருந்து, இந்த ஆமைகளை மேற்கு வங்காளத்தில் உள்ள அசன்சோல் பகுதிக்கு கடத்திச் செல்ல முற்பட்டபோது பிடிபட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளைப் போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications