தோஹாவின் பிசியான சாலையில் கிலியை கிளப்பிய புலி: தீயாக பரவும் வீடியோ
தோஹா: கத்தாரின் தோஹா நகரில் சாலையில் புலி ஒன்று ஹாயாக சுற்றியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கத்தாரின் தோஹா நகரில் உள்ள எக்ஸ்பிரஸ்வேயில் ஓடும் டிரக்கில் இருந்து புலி ஒன்று நேற்று காலை சாலையில் விழுந்தது. சாலையில் வாகனங்கள் வரிசையாக நிற்கையில் அந்த புலி அந்த இடத்தை விட்டு வெளியேற வழி தேடி ஓடியது.
சாலையில் புலி ஓடி வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் சப்தமில்லாமல் காருக்குள் இருந்தனர். அந்த புலி சாலையில் ஓடி வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
அந்த புலி பிடிக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. வளைகுடா நாடுகளில் உள்ள பணக்காரர்கள் புலிகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள்.
அத்தகைய செல்லப்பிராணி புலி தான் சாலையில் சுற்றித் திரிந்தது என்று கூறப்படுகிறது. அந்த புலியின் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications